மாதப்பூர் ஊராட்சி மன்ற கூட்டம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம், ஜூன் 18: பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் கிராம ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். செயலாளர் தங்கராஜ் வரவேற்றார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தொட்டம்பட்டி காலனி பகுதியில் சாலையோர பூங்கா அமைப்பது. லட்சுமி நகர் தரைப்பாலத்தில் குழாய்கள் அமைத்து சிறிய பாலம் அமைப்பது, கிருஷ்ணாபுரம் ஆரம்பப்பள்ளி, மாதப்பூர் காலனி பகுதி, கள்ளகிணறு காலனி பகுதி, தொட்டம் பட்டி அங்கன்வாடி பள்ளி ஆகிய இடங்களில் சின் டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்வது உள்பட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஜல்ஜீவன் திட்டத்தில், குளறுபடிகள் உள்ளதாக துணைத்தலைவர் பாலசுப்ரமணியம் ஆட்சேபனை தெரிவித்தார்.

The post மாதப்பூர் ஊராட்சி மன்ற கூட்டம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: