யானையை விரட்டியவர் தேள் கடித்து பலி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி, தட்டாம்பாறையை சேர்ந்தவர் சுரேஷ் (36). விவசாயி. இவரது மனைவி ஷில்பா (30). 2 குழந்தைகள் உள்ளனர். சுரேசின் விவசாய தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் காட்டு யானை புகுந்தது. நண்பர்களுடன் சென்று யானையை வனத்துக்குள் விரட்டினார். அப்போது சுரேஷை ஏதோ கடித்துள்ளது. பூச்சியாக இருக்கும் என்று பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. வீட்டிற்கு சென்றபிறகு வலியால் துடித்தவரை கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போதுதான் அவரை தேள் கடித்து விஷம் உடல் முழுவதும் பரவியது தெரிந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுரேஷ் நேற்று இறந்தார்.
The post யானையை விரட்ட வெடி வைத்த தம்பதி படுகாயம்: விவசாயி வலது கை சிதைந்தது appeared first on Dinakaran.