உக்ரைன் படைகள் பெரிய அளவில் போரில் ஈடுபட தொடங்கி உள்ள நிலையில், உக்ரைனின் எல்லையை ஒட்டிய பெலாரஸ் நாட்டில் திறன் வாய்ந்த அணு ஆயுதங்களை குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அணு
ஆயுதங்களை அந்நாட்டிற்கு ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றின் முதல் பகுதி வந்தடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பெலாரஸ் அதிபர் Aleksandr Lukashenko, தடுப்பு நடவடிக்கைகளுக்காகவே இவை குவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து பெற்ற அணு ஏவுகணைகள் ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட சக்தி வாய்ந்த குண்டுகளை விட 3 மடங்கு அதிக சக்தி வாய்ந்தவை என்றும் அதிபர் கூறி இருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ஹிரோஷிமா, நாகசாகியை தாக்கிய குண்டுகளை விட சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை பெலாரஸுக்கு அனுப்பி வைத்த ரஷ்யா.. உக்ரைனில் பதற்றம்!! appeared first on Dinakaran.
