நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் திருடிய 2 பேர் கைது

மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டியின் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மும்பையின் ஜுஹூ பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இருந்து கடந்த வாரம் விலை உயர்ந்த பொருட்கள் சில திருட்டு போனது. இதுகுறித்து ஜுஹூ காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

The post நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: