தூத்துக்குடி பாஜ நிர்வாகி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோனிராஜ். இவருடையா முகநூல் பக்கத்தில், செல்வபாலன் என்ற செல்வா என்பவர் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ், செந்தில்பாலாஜி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோரை அவதூறாக சித்தரித்திருந்தார்.இது குறித்து அந்தோனிராஜ் அளித்த புகாரின் பேரில், குலையன்கரிசலை சேர்ந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ள செல்வபாலன் (29) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post தூத்துக்குடி பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: