இதுதொடர்பாக தேசிய ஆவணக் காப்பகம் நடத்திய விசாரணையில் அந்த ஆவணங்களை அதிகாரிகளிடம் டிரம்ப் ஒப்படைத்தார். மேலும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் சில ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவ்விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது, 37 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கு மியாமி நகரிலுள்ள புளோரிடா தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அவருக்கு எதிராக கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் மியாமி நீதிமன்றத்தில் நேற்று பலத்த பாதுகாப்புடன் டிரம்ப் சரணடைந்தார். விசாரணையின் தொடக்கத்தில், ‘உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்கிறீர்களா?’ என்று நீதிபதி கேட்டதற்கு, ‘இல்லை’ என்று டிரம்ப் பதிலளித்தார். டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 45 நிமிட விசாரணைக்கு பின்னர், அவரை கைது செய்த நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுவித்தது. அதன்படி, டிரம்ப் தனது பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் கேட்கவில்லை. அதேநேரம் சக ஊழியர் வால்ட் நவுடாவுடன் பேசக் கூடாது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பின் டிரம்ப் மியாமி நகரில் இருந்து புளோரிடா சென்றார்.
The post கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோர்ட்டில் ஆஜரான டிரம்ப் கைதாகி விடுவிப்பு: அமெரிக்காவில் பரபரப்பு appeared first on Dinakaran.