இந்தச் சம்பவத்தின் காரணமாக தென் மத்திய ரயில்வே குறைந்தது 6 ரயில்களை ரத்து செய்துள்ளது மற்றும் சில ரயில்களின் நேரத்தை மாற்றியமைத்துள்ளது. இன்று இயக்கவிருந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விசாகப்பட்டினம்-லிங்கம்பள்ளி, விசாகப்பட்டினம்-விஜயவாடா, விஜயவாடா-விசாகப்பட்டினம் மற்றும் விசாகப்பட்டினம்-குண்டூர். இந்நிலையில் வியாழக்கிழமை புறப்பட வேண்டிய லிங்கம்பள்ளி-விசாகப்பட்டினம், குண்டூர்-விசாகப்பட்டினம் இரண்டு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விசாகப்பட்டினத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை புறப்பட வேண்டிய விசாகப்பட்டினம்-செகந்திராபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
The post ஆந்திராவில் தாடி மற்றும் அங்கபல்லே ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் தடம் புரண்டது..!! appeared first on Dinakaran.