வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில், இணைய வழியில் விண்ணப்பிக்காதவர் நேரில் வந்து சேரலாம்

பெரம்பலூர்,ஜூன்14:வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையிலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடப்பு 2023-2024ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கல்லூரியில் நடந்து வரும் நேரடி கலந்தாய்வு மூலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனையொட்டி வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில் உள்ள இளநிலை பட்டவகுப்புகளான பிஏ தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக மேலாண்மையியல், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோடெக்னாலஜி, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்,பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் இணையவழியில் விண்ணப்பித்தோருக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு வரும் 16ம்தேதியன்று காலை 10 மணிக்குக் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற உள்ளது. இணையவழியில் விண்ணப்பிக்காதோரும் கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்திசெய்து அலுவலகத்தில் அளிக்கலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில், இணைய வழியில் விண்ணப்பிக்காதவர் நேரில் வந்து சேரலாம் appeared first on Dinakaran.

Related Stories: