அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, 1 கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில், புரசைவாக்கம் திடீர் நகர் பிரிக்ளின் சாலையை சேர்ந்த கலை (32) என்றும், கஞ்சா வியாபாரியான இவர் மீது கஞ்சா மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் பெண் கஞ்சா வியாபாரி கலையை கைது செய்தனர்.
The post அயனாவரம் பஸ் டிப்போ அருகே கஞ்சா விற்பனை செய்த பெண் வியாபாரி கைது appeared first on Dinakaran.