தனது 7 சவரன் செயினை வழிப்பறி கொள்ளையர்களை பறித்து சென்றதால் பூங்கொடி சாலையிலேயே கதறி அழுதார். பிறகு சம்பவம் குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பூங்கொடி புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று பைக்கில் தப்பி சென்ற வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சைதாப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post சைதாப்பேட்டையில் பரபரப்பு; பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு: சிசிடிவி மூலம் பைக் ஆசாமிகளுக்கு வலை appeared first on Dinakaran.