பாவம் கன்பியூஷன் ஆகிட்டாரு… ஆண் குழந்தைக்கு பெண் பெயர் சீமானால் சிரிப்பலை

நாம் தமிழர் கட்சி சார்பாக காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், பொதுகூட்டம் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. மேடையில் சீமான் பேச்சை தொடங்கும்போது, அக்கட்சியின் உறுப்பினர் தனது குழந்தையை சீமானிடம் கொடுத்து, பெயர் வைக்க கேட்டுக் கொண்டார். உடனே சீமானும், ‘வெண்ணிலா’ என்று பெயர் சூட்டினார். உடனே அருகில் இருந்த அந்த குழந்தையின் தாய் சிரித்தப்படி ஒரு நிர்வாகியிடம், ‘அது ஆண் குழந்தை’ என்று காதில் சொல்கிறார். அவர் சீமானிடம் சென்று, ‘அண்ணா உங்கள் கையில் உள்ளது ஆண் குழந்தை’ என்று கூறினார்.

உடனே சுதாரித்துக் கொண்ட சீமான், ‘பெயர் வைக்கும் முன் ஆணா, பெண்ணா என தெரிவிக்க மாட்டீர்களா’ என கேட்டு ‘வெற்றிவேந்தன்’ என பெயரிட்டார். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது. மற்ற அரசியல் தலைவர்களை நையாண்டியும் நக்கலும் பேசிவரும் சீமான், தற்போது தனது கட்சியின் உறுப்பினரின் ஆண் குழந்தைக்கு பெண் பெயர் வைத்ததை கூட்டத்துக்கு வந்தவர்கள் நையாண்டி செய்து சிரித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், ‘பாவம் ரொம்ப கன்பியூஷன்ல இருக்காரு போல’… ‘அவசரப்பட்டீங்களே… கொஞ்சும் யோசிச்சு பேசி இருக்கலாம்…’ என கிண்டலடித்து வருகின்றனர்.

The post பாவம் கன்பியூஷன் ஆகிட்டாரு… ஆண் குழந்தைக்கு பெண் பெயர் சீமானால் சிரிப்பலை appeared first on Dinakaran.

Related Stories: