ஆவடி அருகே தனியார் ஊழியரின் கழுத்தை பிளேடால் அறுத்த 2 பேர் கைது

ஆவடி: ஆவடி அருகே தனியார் கம்பெனி ஊழியரின் கழுத்தை பிளேடால் அறுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர். ஆவடி அருகே கவுரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆரிப் (26). அதே பகுதியில் ஒரு தனியார் கம்பெனியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர், மிட்னமல்லி பகுதியை சேர்ந்த வசந்தவேலன். கடந்த 8ம் தேதி இரவு ஆவடி மார்க்கெட்டில் உள்ள தனது அண்ணன் அஷ்ரப் அலியின் (30) கடைக்கு ஆரிப் வந்தார். அப்போது, குடிபோதையில் வந்த வசந்த்வேலன் மற்றும் 2 மர்ம நபர்கள் ஆரிப்பிடம் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வசந்த்வேலன் கோஷ்டி, ஆரிப்பின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு, அவரது செல்போனை பறித்து கொண்டு தப்பியது.

படுகாயமடைந்த ஆரிப்பை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, வசந்தவேலன் உள்பட 3 பேர் கும்பலை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு வசந்தவேலன் (25) மற்றும் கொடுங்கையூரை சேர்ந்த பிரகாஷ் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும், வழக்கு தொடர்பாக தலைமறைவான மற்றொரு நபரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

The post ஆவடி அருகே தனியார் ஊழியரின் கழுத்தை பிளேடால் அறுத்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: