தேன்கனிக்கோட்டை, கெலமங்கலத்தில் விதிமீறி வைத்த பேனர்கள் அகற்றம்

தேன்கனிக்கோட்டை, ஜூன் 10: தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பகுதியில், அனுமதியின்றி விதி மீறி வைத்திருந்த பேனர்களை, பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு அறிவுறுத்தலின் பேரில், தேன்கனிக்கோட்டை மற்றும் கெலமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருக்கள், மின்கம்பங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பேனர்கள், தனியார் பள்ளி-கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விளம்பர பேனர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பேனர்கள், மின் கம்பங்களில் கட்டியிருந்த விளம்பர தட்டிகளை பேரூராட்சி பணியாளர்கள் அதிரடியாக அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து, அனுமதியின்றி பேனர்கள் வைத்தால், அபராதம் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

The post தேன்கனிக்கோட்டை, கெலமங்கலத்தில் விதிமீறி வைத்த பேனர்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: