அரியலூர் அருகே பாம்பு கடித்து மூதாட்டி சாவு

 

ஜெயங்கொண்டம், ஜூன் 10: அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் காலனி தெருவை சேர்ந்த அழகுமுத்து மனைவி பெரியம்மாள் (60). இவர் கடந்த 5ம் தேதி வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது. இதையறிந்த அக்கம் பக்கத்தினர் பெரியம்மாளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அரியலூர் அருகே பாம்பு கடித்து மூதாட்டி சாவு appeared first on Dinakaran.

Related Stories: