வேலைக்கு சென்ற பெண் மாயம்

 

ஈரோடு, ஜூன் 10: சத்தியமங்கலம் வடக்குபேட்டை, தண்டுமாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் நவ்யாஸ்ரீ (26). இவருக்கும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 3 மாதங்களாக தனது பெற்றோர் வீட்டில் இருந்து கொண்டு நவ்யா ஸ்ரீ பூக்கடை ஒன்றில் பகுதி நேர வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 16ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற நவ்யா ஸ்ரீ மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தந்தை ராஜா சத்தியமங்கலம் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேலைக்கு சென்ற பெண் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: