கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், சின்னக்கானல் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிசிக்கொம்பன் யானையை, கடந்த ஏப். 27ம் தேதி மயக்க ஊசி போட்டு பிடித்து தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதியில் விடுவித்தனர். இதையடுத்து மே 5ம் தேதி அரிசிக்கொம்பன் யானை தேக்கடியிலிருந்து இரவங்கலாறு பகுதிக்கு வந்து மணலாறு, ஹைவேவிஸ், மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்தது. பின்னர் கம்பம் நகருக்குள் புகுந்து பொதுமக்களை விரட்டியது. இதனால் இப்பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசின் தொடர் முயற்சியால் கடந்த 5ம் தேதி அரிசிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்டு, நெல்லை மாவட்டம், களக்காடு முண்டந்துறை மணிமுத்தாறு வனப்பகுதியில் விடப்பட்டது. இதையடுத்து 144 தடையுத்தரவு நீக்கப்பட்டு, மேகமலைக்கு செல்ல வனத்துறை தற்போது அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post அரிசிக்கொம்பன் ‘காடு கடத்தல்’: மேகமலைக்கு செல்ல வனத்துறை அனுமதி appeared first on Dinakaran.