வீட்டின் மாடியில் தூங்கிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

அண்ணாநகர்: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் கடந்த 7ம் தேதி இரவு 23 வயது இளம்பெண் தனது குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை சுமார் 3 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் மாடிக்கு சென்று, அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போடவே, பயந்துபோன மர்ம நபர் தப்பி சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் நொளம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முகப்பேர் மேற்கு, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வெற்றி (36) என்பது தெரிந்தது. அவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, பெண் வன்கொடுமை கீழ் வழக்குபதிவு செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post வீட்டின் மாடியில் தூங்கிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: