அப்போது முதல் கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று போது, எதிர்பாராத விதமாக காரில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரண் கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள், காரை விட்டு இறங்கி ஓடினர். பின்னர் கார் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. மேலும் இது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர், சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீ விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மேட்டுப்பாளையம் அருகே கல்லார் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து..!! appeared first on Dinakaran.