விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நேற்று காலை நடந்தது. இதற்காக கோயில் முன்பு பூக்குண்டம் ஏற்படுத்தப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் கைக்குழந்தைகளுடன் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் பழநி பகுதி சுற்றப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் நெய்க்காரப்பட்டி-கொழுமம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டிஎஸ்பி சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
The post பழநி அருகே மண்டுகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா: 5 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.