தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு

சென்னை: முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிக்கான படிக்க விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று ஆவணக் காப்பாக ஆணையர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு ஆவணக் காப்பாகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் வரலாறு, சமூக அறிவியல், தமிழ் தொடர்புடைய துறைகளில் உதவித்தொகையுடன் கூடிய ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு, முதுகலை பட்டப்படிப்பை முடித்த கல்வியாளர்களிடம் இருந்து சென்னை, எழும்பூர், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் நோக்கம், ஆர்வமுள்ள முதுகலை பட்டதாரிகள் ஆவணக் காப்பகத்தின் தொன்மையான ஆவணங்களை ஆராய்ந்து, சமூகத்திற்கு பயனளிக்கக்கூடிய வகையில் தங்களது ஆராய்ச்சியினை மேம்படுத்தி கொள்வதற்கும், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றினை வெளிக் கொண்டுவருவதற்கும் உதவுவதாகும். விண்ணப்பத்தின் விவரங்கள் மற்றும் படிவம் ஆகியவற்றை www.tnarchives.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் இந்த அலுவலகத்துக்கு வருகிற 30ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: