அப்போது விஷால் சிங், கைப்பையில் இருந்து, வெடிகுண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த கைப்பையை தனியே எடுத்துவைத்தனர். விசாரணையில் விஷால் சிங், அந்த கைப்பையில் குண்டு எதுவும் இல்லை என்று கூறினார். ஆனாலும் பாதுகாப்பு அதிகாரிகள், கைப்பையை சோதித்தபோது, அதனுள் எஸ்.எல்.ஆர். துப்பாக்கியில் பயன்படுத்தும், துப்பாக்கிக்குண்டு ஒன்று லைவ்வாக இருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து விஷால் சிங் மும்பை பயணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனர். அதன் பின்பு விஷால் சிங்கையும், துப்பாக்கி குண்டையும் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விஷால் சிங், தனது தந்தை, ஸ்ரீ நகரில் சி ஆர் பி எப் உதவி ஆய்வாளராக பணியில் இருக்கிறார். இந்த பை எனது தந்தை உடையது தான். அவர் பயன்படுத்தும் துப்பாக்கி குண்டு, இந்தப் பையில் இருந்திருக்கிறது. நான் கவனிக்காமல் எடுத்து வந்து விட்டேன் என்று கூறினார். ஆனாலும் போலீசார் துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்தனர். அதோடு ஸ்ரீ நகரில் உள்ள, விஷால் சிங்கின் தந்தைக்கும் தகவல் கொடுத்தனர். அதோடு விஷால் சிங் தங்கியிருந்த புதுச்சேரி மாநிலம், அவர் படித்த கல்லூரி, ஆகியவற்றிலும் விஷால் சிங்கின், பின்னணி குறித்து விசாரணை நடத்துகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post விமான நிலையத்தில் பரபரப்பு மும்பை செல்ல துப்பாக்கி குண்டுடன் வந்த மாணவர் appeared first on Dinakaran.