டீக்கடையில் டீ குடித்துவிட்டு பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 பெண் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் கமிஷனர் உத்தரவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு, அதற்கான பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உட்பட 4 போலீசாரை சஸ்பெண்ட் செய்து தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இலவசமாக பொருட்களை கேட்டு வாக்குவாதம் செய்ததாக எழுந்த புகாரில் நான்கு பெண் காவலர்கள் பணியிட நீக்கம் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் ஜூஸ் கடை ஒன்றில் பிரெட்ஆம்லெட் , ஜூஸ், சாக்லெட் போன்றவற்றை ஓசியில் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் மகளிர் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு அளித்துள்ளார்.

கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விஜயலட்சுமி. அதே காவல் நிலையத்தில் ஜெயமாலா உள்ளிட்ட 4 பேர் காஞ்சிபுரம் மாவட்டம் படைப்பை பகுதியில் உள்ள ஜூஸ் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் அந்த கடைக்கு சென்றபோது 4 காவலர்களும் அந்த விற்பனையாளர்களிடம் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி உள்ளிட்ட காவலர்கள் 4 பேர் பிரெட்ஆம்லெட் , ஜூஸ், சாக்லெட், குடிநீர் பாட்டில் போன்றவற்றை ஓசியில் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். கடை விறபனையாளர் அவர்கள் கேட்ட பொருளை தர மறுத்துள்ளார்.

இதன்பிறகு அந்த கடையில் பணிபுரியும் விற்பனையாளரிடம் கடையின் உரிமையாளர்களுக்கு போன் செய்து கொடு என்று கேட்டுள்ளார். அவரும் போன் செய்து கொடுத்துள்ளார். அப்போது வந்த கடையின் உரிமையாளரிடம் நாங்கள் உங்களுக்காக தான வேலை செய்கிறோம் எங்களுக்கு இந்த பொருள் கூட தரமாட்டியா என்றும் நீ தரும் பொருள் இன்ஸ்பெக்டர் தான கொடுக்க போற உன்னோட கடையின் உரிமத்தை ரத்து செய்து விடுவேன் என்றும் உரிமையாளரை கவலை நிலையத்தில் வந்து அதிகாரிகளை பார்க்க சொல்லியும் போனில் மிரட்டியுள்ளார்.

இதன் பிறகு சிசிடிவி பதிவில் பதிவான காட்சிகளை கொண்டு கடையின் உரிமையாளர் தாம்பரம் கமிஷ்னர் அலுவலகத்தில் விஜயலட்சுமி, ஜெயமாலா உள்ளிட்ட 4 பேரின் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமி, ஜெயமாலா உள்ளிட்ட 4 காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து கமிஷ்னர் அமல்ராஜ் உத்தரவு அளித்துள்ளார்.

The post டீக்கடையில் டீ குடித்துவிட்டு பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 பெண் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் கமிஷனர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: