வையம்பட்டி அருகே கார் மோதி முதியவர் பலி

 

துவரங்குறிச்சி, ஜூன் 7: வையம்பட்டி அருகே கார் ேமாதிய விபத்தில் முதியவர் பலியானார். திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே கல்பட்டியை சேர்ந்த தங்கவேல் (65). கூலி வேலை செய்து வந்த இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கல்பட்டி பிரிவு சாலையை கடக்க முயன்றார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலிசார் விரைந்து வந்து தங்கவேலு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

The post வையம்பட்டி அருகே கார் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: