நொச்சிகுளம் கிராமத்தில் மாரியம்மன் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி

 

பாடாலூர், ஜூன் 7: ஆலத்தூர் தாலுகா நொச்சிகுளம் கிராமத்தில் மாரியம்மன் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி விமரிசையாக நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நொச்சிகுளம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு சுவாமி வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது. இரவு மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் வீதிஉலா மாரியம்மன் கோயில் முன்பு தொடங்கி முக்கிய வீதியின் வழியாக வீதி உலா நடைபெற்றது. வீதி உலாவின் போது பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு தேங்காய், வாழைப்பழம் போன்ற அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நொச்சிகுளம் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

The post நொச்சிகுளம் கிராமத்தில் மாரியம்மன் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: