மாடு இழுத்து சென்றதில் காயம் அடைந்த முதியவர் பலி

 

ஈரோடு, ஜூன் 7: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பெரியகள்ளிப்பட்டி கோட்டை புதூரை சேர்ந்தவர் காளியப்பன் (70). இவர், அவரது மகன் மயில்சாமி பராமரிப்பில் இருந்து கொண்டு, கால்நடைகளை வளர்த்து வந்தார். கடந்த மாதம் 28ம் தேதி காளியப்பன் அவரது 2 மாடு கன்றுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். அப்போது, கன்று வேகமாக கயிறுடன் இழுத்து சென்றதில், காளியப்பன் கீழே விழுந்து நெஞ்சு, நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து காளியப்பன் மீட்கப்பட்டு அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாடு இழுத்து சென்றதில் காயம் அடைந்த முதியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: