புழல் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: சென்னைக்கு குடிநீர் பிரச்னை வராது

புழல்: புழல் ஏரிக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளதால் சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்னை வராது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மக்களுக்கு புழல் ஏரியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு பெய்த மழை மற்றும் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் புழல் ஏரிக்கு தண்ணீர்வரத்து அதிகரித்தது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. மற்றொரு ஏரியான சோழவரம் ஏரியில் இருந்து இன்று காலை முதல் உபரிநீர் வினாடிக்கு 200 கன அடி அனுப்பப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக புழல் ஏரியில் தண்ணீர் இருப்பு 2173 மில்லியன் கன அடியாக உள்ளது. இதையடுத்து சென்னை மக்களுக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 159 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதன்காரணமாக கோடை காலத்தில் புழல் ஏரி கடல் போல் காட்சி அளிப்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.“தற்போது புழல் ஏரியில் போதிய அளவு தண்ணீர் உள்ளதால் கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்னை வராது’’ என்றுபொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post புழல் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: சென்னைக்கு குடிநீர் பிரச்னை வராது appeared first on Dinakaran.

Related Stories: