துவரங்குறிச்சி அருகே செம்மண் அள்ளிய டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்

துவரங்குறிச்சி, ஜூன் 6: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே செம்மண் அள்ளிய டிப்பர் லாரி மற்றும் பொக்லைனை போலீசார் பறிமுதல் செய்தனர். மருங்காபுரி ஒன்றியம் அதிகாரம் புதுக்குளத்தில் சிலர் செம்மண் எடுப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலயடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, போலீசைக் கண்டதும் குளத்தில் செம்மண் எடுத்துக்கொண்டிருந்த நபர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். அதனையடுத்து டிப்பர் லாரி மற்றும் செம்மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைனை பறிமுதல் செய்த துவரங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post துவரங்குறிச்சி அருகே செம்மண் அள்ளிய டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: