பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்புக்கு மிகவும் தெளிவான திட்டத்தோடு இந்தியா முன்னோக்கி செல்கிறது. வளரும் நாடுகள் வளர்ச்சியை மேற்கொண்ட பின்னர், சுற்றுச்சூழல் குறித்து கவலைத் தெரிவிக்கும் போக்கு உலகின் பெரிய மற்றும் நவீன நாடுகளுக்கிடையே இருந்து வருகிறது. அத்தகைய நாடுகள், வளர்ச்சியின் இலக்குகளை அடைந்தாலும், சுற்றுச்சூழலுக்கான உலக நாடுகள் விலைக்கொடுக்க நேர்ந்தது. வளர்ந்த நாடுகளின் தவறான கொள்கைகளால், வளரும் மற்றும் வளர்ச்சிப்பெறாத நாடுகள் பாதிக்கப்பட்டன. பல ஆண்டுகளாக சில வளர்ந்த நாடுகள், இந்த அணுகுமுறையை நிறுத்தவில்லை. அத்தகைய நாடுகளிடம் பருவநிலை நீதி குறித்து இந்தியா கேள்வி எழுப்பியது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.
The post வளர்ந்த நாடுகளின் தவறான கொள்கைளால் வளரும் நாடுகளுக்கு பாதிப்பு: மோடி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.