சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்று பறந்து வந்தது. அதனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும், அதனுள் 3 கிலோ ஹெராயின் போதைப்பொருளை மீட்டுள்ளதாகவும் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நேற்று இரவு 9.45 மணியளவில் ஆளில்லா விமானம் ஒன்று, பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவி வந்தது. அந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினோம். அமிர்தசரஸ் அடுத்த ரத்தன்குர்ட் கிராமத்தில் உள்ள வயலில் ட்ரோன் விழுந்தது. அதனுள் மூன்று ஹெராயின் பாக்கெட்டுகள் இருந்தன. சுமார் 3.20 கிலோ எடை கொண்டது’ என்று அவர் கூறினார்.

The post சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன் appeared first on Dinakaran.

Related Stories: