வில்லிவாக்கம், அகத்தீஸ்வரர் திருக்கோயில் சார்பில் மாற்றுத்திறனாளி இணைகளுக்கு திருமணம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படியும், இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு மேற்கொள்தல், திருத்தேர்கள், திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

2023 – 24 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் திருக்கோயில்களில் திருமணம் செய்து கொள்கின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கிராம் பொன் தாலி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கடந்த 27.04.2023 அன்று சென்னை, கோயம்பேடு, அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளி இணைகளுக்கு 4 கிராம் பொன் தாலியுடன் திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து இன்று (05.06.2023) சென்னை, வில்லிவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் 2 மாற்றுத்திறனாளி இணைகளுக்கு 4 கிராம் பொன் தாலியுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதுவரை 100 மாற்றுத்திறனாளி இணைகளுக்கு திருக்கோயில்கள் மூலம் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் சென்னை மண்டல இணை ஆணையர் 2 கி.ரேணுகாதேவி, கொளத்தூர் காவல் துறை துணை ஆணையர் சி.சக்திவேல், காவல் துறை உதவி ஆணையர் இராகவேந்திரன் கே.ரவி, மாவட்ட அறங்காவலர் உறுப்பினர் சாவித்திரி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் எம்.பாஸ்கரன், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளையின் தலைவர் சிம்மசந்திரன், பாடி திருவல்லீசுவரர் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வானவில் விஜய், மாநகராட்சி மன்ற உறுப்பினர் சுதா, திருக்கோயில் செயல் அலுவலர்கள் அ.குமரேசன், கே.பாரதிராஜா, ஆர்.கேசவராஜன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

The post வில்லிவாக்கம், அகத்தீஸ்வரர் திருக்கோயில் சார்பில் மாற்றுத்திறனாளி இணைகளுக்கு திருமணம் appeared first on Dinakaran.

Related Stories: