புதுச்சேரியில் வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன்கருதி 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளும் வரும் 14ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சராசரியாக 100 பாரன்ஹீட்க்கு மேலாக வெப்பம் பதிவானது. இதன் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

வெயிலின் தாக்கம் தொடர்ச்சியாக இருந்து வருவதால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறையயை நீட்டிக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர். புதுச்சேரியில் வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் வரும் 14ம் தேதி திறக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மேலும் பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் கடும் வெயிலின் தாக்கத்தால் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளும் வரும் 14ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகளின் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.

The post புதுச்சேரியில் வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: