வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் கொள்ளை

 

ஈரோடு,ஜூன்5: ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில், கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன்(54). இவர், அரசு போக்குவரத்துக் கழகம், பெருந்துறை கிளையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர்,தனது மனைவியுடன், துணி எடுப்பதற்காக கடந்த 2ம் தேதி ஈரோடு சென்றுவிட்டார். அன்ற மாலை 4 மணியளவில் அவர்கள் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.இதுகுறித்து மாதேஸ்வரன், காஞ்சிக்கோயில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், நேற்று முன் தினம் போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: