காவிரியில் மூழ்கி தம்பதி பலி குழந்தைகள் கதறல்

இடைப்பாடி: சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் ஆவடத்தூரை சேர்ந்தவர் ஜனார்த்தனன்(27). இவரது மனைவி பவித்ரா(24). இவர்களுக்கு புகழ்(6), வெற்றிவிழி(4) என்ற குழந்தைகள் உள்ளனர். விடுமுறையையொட்டி, இவர்கள் நண்பர்கள் யுவராஜ்(28), ஜோதிவேல்(16) ஆகியோருடன் 2 டூவீலர்களில் நேற்று பூலாம்பட்டிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு மூலப்பாறை பகுதியில் காவிரியில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற பவித்ராவும், அவரை காப்பாற்ற சென்ற ஜனார்த்தனனும் நீரில் மூழ்கி பலியாகினர். குழந்தைகள், நண்பர்கள் கதறி அழுதனர்.

The post காவிரியில் மூழ்கி தம்பதி பலி குழந்தைகள் கதறல் appeared first on Dinakaran.

Related Stories: