மணிப்பூரில் குக்கி தீவிரவாதிகள் தாக்குதல்: 15 பேர் காயம், 2 பேர் கவலைக்கிடம்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர்.மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே கடந்த மே 3ம் தேதி நடந்த பேரணியில் மோதல் ஏற்பட்டு கலவரம் மூண்டது. இந்த கலவரங்களில் 98 பேர் உயிரிழந்து விட்டனர். 310 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 37,450 பேர் 272 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க மாநில, ஒன்றிய அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் மேற்கு இம்பால் மாவட்டத்தில் ஃபாயெங், காங்சுப் சிங்காங் கிராமங்களில் அதிநவீன ஆயுதங்கள், வெடிகுண்டுகளை பயன்படுத்தி குக்கி தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 4 மணி நேரத்துக்கும் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

The post மணிப்பூரில் குக்கி தீவிரவாதிகள் தாக்குதல்: 15 பேர் காயம், 2 பேர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Related Stories: