இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு 7 பேர், வாக்கி டாக்கி மற்றும் மதுபாட்டில்களுடன் நின்றிருந்தது தெரிய வந்தது.
பின்னர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், மரத்துறை கீழத்தெருவை சேர்ந்த செந்தில் (40), திருப்பனந்தாள் வடக்கு தெரு சசிகுமார் (50), காளியம்மன் கோவில் தெரு ரவி (55), விளத்தூர் மாரியம்மன் கோவில் தெரு ஆறுமுகம் (30), சோழபுரம் துலுக்கவெலி சேகர் (63), கல்லூர் கணேசன் (46), காட்டுமன்னார்கோவில் குளக்கரை தெரு சரவணன் (26) என்பது தெரிய வந்தது. 7 பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து போலீசார் விசாணை நடத்தியதில், ஆன்லைன் மூலம் வாக்கிடாக்கிகளை வாங்கியதும், டாஸ்மாக் அருகே உள்ள மண்ணியாற்றங்கரையில் ரகசியமாக பார் நடத்தியதும், வாக்கி டாக்கி மூலம் தகவல் பரிமாறி மதுஅருந்துபவர்களுக்கு தேவையான உணவு, தின்பண்டங்களை சப்ளை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து வெளிமாநில லேபிள்கள் ஒட்டப்பட்ட 50 குவார்ட்டர் பாட்டில், 3 வாக்கி டாக்கிகள், 2 சார்ஜர்களை கைப்பற்றினர்.
The post ஆன்லைனில் வாங்கி வாக்கி டாக்கி மூலம் பிளாக்கில் மது விற்பனை: 7 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.