மகாத்மா காந்தியின் பேரன் என்னையும், இந்த ஆட்சியையும் பாராட்டி பேசியது என் வாழ்நாள் வரம்.: ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

சென்னை: மகாத்மா காந்தியின் பேரன் தன்னையும், தனது ஆட்சியையும் பாராட்டி பேசியது தன் வாழ்நாள் வரம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞரின் 100வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இது கலைஞரின் நூற்றாண்டு விழா என்பதால், ஓராண்டு முழுவதும் கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக சார்பிலும் முடிவு செய்யப்பட்டது.அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காந்தியின் பேரனும் மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்,இலச்சினை வெளியிட, முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார்.புகைப்பட கண்காட்சியுடன் கலைஞரின் சாதனைகள் குறித்த ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பெரியாரின் கொள்கை வாரிசான கலைஞரை வாழ்த்துவதற்காக காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி வருகை தந்துள்ளார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்களுக்கும் காந்தியடிகளுக்குமான தொடர்பை கோபாலகிருஷ்ண காந்தி நன்கு அறிவார்.மதவெறியன் கோட்சேவால் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது பெரியார் அடைந்த வேதனை வார்த்தைகளால் சொல்ல முடியாது.அண்ணாவைப் போல கலைஞரும், காந்தியடிகள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார் .திராவிட இயக்கம் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர் கோபாலகிருஷ்ண காந்தி.திராவிடக் கப்பல் சென்றடைய வேண்டியது கூட்டாட்சித் துறைமுகம் என்றுக் குறிப்பிட்டார் கோபாலகிருஷ்ண காந்தி. மகாத்மா காந்தியின் பேரன் என்னையும், இந்த ஆட்சியையும் பாராட்டி பேசியது என் வாழ்நாள் வரம்,”என்றார்.

The post மகாத்மா காந்தியின் பேரன் என்னையும், இந்த ஆட்சியையும் பாராட்டி பேசியது என் வாழ்நாள் வரம்.: ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!! appeared first on Dinakaran.

Related Stories: