போதையில் பக்கத்து வீட்டு ஜன்னலை நொறுக்கிய ரவுடி கைது

பெரம்பூர்: வியாசர்பாடி, எம்கேபி நகர் 10வது கிழக்கு குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி அருணா. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிவண்ணன் (31) என்பவர், மது போதையில் வீட்டின் மாடி வழியாக வந்து, கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு ஜன்னல் கதவுகளை கட்டையால் அடித்து நொறுக்கியுள்ளார். இதை தட்டிகேட்ட தம்பதியிடம் தகராறு செய்துள்ளார். இதுபற்றி அருணா, எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், மணிவண்ணனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் அவர்மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மணிவண்ணன் மீது ஏற்கனவே 3 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post போதையில் பக்கத்து வீட்டு ஜன்னலை நொறுக்கிய ரவுடி கைது appeared first on Dinakaran.

Related Stories: