விஷ சாராயம் வழக்கு 21 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விஷச்சாராயம் அருந்தி 8-பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, ஏற்கனவே செய்யூர் பகுதியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், 6 பேரையும் சிபிசிஐடி போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். 3 நாட்கள் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட ஏடிஎஸ்பி மகேஸ்வரி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் செய்யூர் பகுதியை சேர்ந்த அம்மாவாசையன், சந்துரு, வேலு, ராஜேஷ், நரேஷ்குமார், விஜயகுமார் ஆகிய 6 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்க உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 21 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், மேலும், செங்கல்பட்டில் ஒருவர் மற்றும் மரக்காணத்தில் 3 பேர் என, 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post விஷ சாராயம் வழக்கு 21 பேரிடம் சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: