தனியார் பள்ளி வாகனம் மோதி காய்கறி வியாபாரி பலி ஓட்டுநர் கைது

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த கொளப்பாக்கத்தை சேர்ந்தவர் புகழேந்தி (22). கடைகளுக்கு காய்கறிகளை விற்பனை செய்கிறார். இவர், நேற்று வியாபாரம் விஷயமாக கெருகம்பாக்கத்தில் இருந்து கொளப்பாக்கத்திற்கு, தனது பைக்கில் சென்று சென்றுக்கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற தனியார் பள்ளி வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக பள்ளி வாகனம் மீது, பைக் மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த புககேழந்தி மீது வேனின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், புகழேந்தி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, புகழேந்தியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் முத்துவை (35). கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post தனியார் பள்ளி வாகனம் மோதி காய்கறி வியாபாரி பலி ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Related Stories: