3 மருத்துவக்கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து விவகாரம் அதிகாரிகள் குழு டெல்லி சென்றது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில், 3 மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து விவகாரம் குறித்து விளக்கமளிக்க அதிகாரி கள் குழு டெல்லி சென்று உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில், சுகாதார நலப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான செயலி அறிமுக விழா, உலக புகையிலை ஒழிப்பு தினம், மாநில அளவிலான துணை இயக்குனர்களுக்கான தட்டம்மை ரூபெல்லா நோய் நீக்குதல் திட்ட பயிலரங்கம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்: தமிழகத்தில் ஸ்டான்லி, தர்மபுரி, திருச்சி மருத்துவமனைகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது முழுமையாக தடை செய்யபட்டு உள்ளது போல செய்தி வருகிறது. இது தொடர்பாக வருகின்ற 4ம் தேதி காணொலி வாயிலாக பேச்சு வார்த்தை கூட்டமும் நடைபெறுகிறது. இதுமட்டுமில்லாமல் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து பேச தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் டெல்லி சென்று உள்ளனர்.

முதலமைச்சரிடம் அனுமதி பெற்று தானும் துறையின் செயலாளரும் ஒன்றிய அமைச்சர்களை டெல்லி செல்ல உள்ளோம். ஏற்கனவே ஒன்றிய அமைச்சர்களிடம் சந்திக்க நேரம் கேட்டக்கப்பட்டுள்ளது. மூன்று கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரம் மட்டும் இல்லாமல் , திருச்சியில் எய்ம்ஸ் சித்த மருத்துவ கல்லூரி வழங்கவும், டெல்லியில் புதிய மருத்துவமனை திறப்பு மற்றும் நிதி ஆதாரங்கள் தொடர்பாக ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க உள்ளோம். புதுக்கோட்டையில் பல் மருத்துவ கல்லூரி 50 மாணவர்கள் சேர்க்கையுடன் துவங்கப்படும். அதேபோல 11 புதிய செவிலியர்கள் பயிற்சி கல்லூரி துவங்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

The post 3 மருத்துவக்கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து விவகாரம் அதிகாரிகள் குழு டெல்லி சென்றது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: