நேற்று மாலை கோம்பைப்பட்டி பகுதி மக்காச்சோளம் தோட்டத்தில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது பலத்த இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில், படப்பிடிப்பிற்கு பயன்படுத்திய மின்விளக்கு ஒன்றின் மீது மின்னல் தாக்கியது. அதன் அருகில் நின்றிருந்த 5 தொழில்நுட்ப கலைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இயக்குனர் சுசீந்தரன், தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
The post பழநி அருகே இயக்குனர் பாரதிராஜா படப்பிடிப்பில் மின்னல் தாக்கியதால் பரபரப்பு: சமூக வலைத்தளங்களில் வைரல் appeared first on Dinakaran.