மருத்துவ மாணவிக்கு, மூத்த மருத்துவர் பாலியல் தொல்லை: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவருக்கு மூத்த மருத்துவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறி யிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆண்டுதோறும் சுமார் 100 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் 3ம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு மூத்த மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி முதல்வரிடம் 2 நாட்களுக்கு முன்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பாலியல் தொல்லை அளித்தவரிடம் எவ்விதமான விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் மாணவ, மாணவிகள் ஒன்றாக மருத்துவ கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மருத்துவப்பணிகளை நிறுத்திவிட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து மருத்துவ கல்லூரி முதல்வர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது குற்றம்சாட்டப்பட்டவரிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

The post மருத்துவ மாணவிக்கு, மூத்த மருத்துவர் பாலியல் தொல்லை: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: