பின்னர் சுஷாந்த் காரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து சீட்டிற்கு அடியில் சிறிய பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்ட ரூ.1.5 கோடியை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அப்போது அவ்வழியாக வந்தவர்கள் விரட்டியதால், சுஷாந்தை மட்டும் அங்கேயே இறக்கி விட்டு அவரது கார் உட்பட 3 கார்களில் தப்பிச் சென்றனர். பின்னர், சுஷாந்தின் காரை நிறுத்தி அதில் இருந்த ரூ.1.5 கோடி பணக்கட்டுகளை எடுத்து கொண்டு தப்பினர். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசில் வழக்குப்பதிந்து சுஷாந்த்துடன் காரில் சென்ற கடை ஊழியரான விஷால் உள்ளிட்ட மேலும் சில ஊழியர்களிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post முகத்தில் மிளகு பொடி தூவி நகை வியாபாரியிடம் ரூ.1.5 கோடி கொள்ளை appeared first on Dinakaran.