நிலம் மோசடி பா.ம.க., மாவட்ட தலைவர் மகன்கள் மீது வழக்கு பதிவு

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சமுத்து. பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக உள்ள இவர், கடந்த 2022ம் ஆண்டு போலி ஆவணங்கள் தயாரித்து ஆத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தனது மகன்கள் பெயரில் நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த ஆவணம் முறையற்றதாக கருதி பத்திரப்பதிவு துறை மாவட்ட பதிவாளர் ரத்து செய்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஆத்தூர் ரூரல் காவல் நிலையத்தில் சார் பதிவாளர் ஆறுமுகம் புகார் தெரிவித்தார். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் விசாரித்து பச்சமுத்து மற்றும் அவரது மகன்கள் ராஜா மற்றும் செல்லதுரை ஆகியோர் மீது போலி ஆவணம் மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

The post நிலம் மோசடி பா.ம.க., மாவட்ட தலைவர் மகன்கள் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: