குழந்தையை தவிக்க விட்டு தாய் மாயம்

 

ஈரோடு, மே 31: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், ரங்கசமுத்திரம் 5வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (39). ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (22). இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி இரவு 7 மணியளவில் மளிகை கடைக்கு சென்று வருவதாக கூறி, குழந்தையை தனது மாமியாரிடம் விட்டுவிட்டு சென்ற சாந்தி இரவு 9 மணிக்கு மேலாகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, அவரது மாமியார், தனது மகன் சுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என எங்கு தேடியும் சாந்தி கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர் சத்தியமங்கலம் போலீசில் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, குழந்தையை தவிக்கவிட்டு மாயமான தாய் சாந்தியை தேடி வருகின்றனர்.

The post குழந்தையை தவிக்க விட்டு தாய் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: