பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் அமைச்சர் சிவசங்கர் பேட்டி

அரியலூர்: அரியலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று அளித்த பேட்டி: சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஜப்பானில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக என்னை தொடர்பு கொண்டு போராட்டத்தை நிறுத்த அறிவுறுத்தினார். இதையடுத்து அவர்களிடம் பேசியதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டு பேருந்துகளை இயக்க தொழிற்சங்க நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனர்.

பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்கப்படும். பள்ளிகள் மற்றும் கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். துமைப்பெண் திட்டத்தால் அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால் பள்ளி கல்வித்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: