வெகு விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயராயினவெல்லாம் நிலந்தரஞ்செய்யும்
நீள்விசும்பருளும் அருளோடு
பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினுமாயின செய்யும் நலந்தரும்
சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்

ஸ்ரீய: பதிவாய், ஸ்ரீவைகுண்ட நிகேதனனாய், ஸமஸ்த கல்யாண குணாத்மாவான ஸர்வேஸ்வரன், அர்ச்சாரூபியாய் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருத்தலமான கீழ்கட்டளையில் எழுந்தறியுள்ள ஸ்ரீவீரஆஞ்ஜனேய – ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி சமேத ஸ்ரீவைகுந்தநாத பெருமாள் கோயிலில் தில்லை கங்கா நகர் சர்வமங்களா ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலய ஸ்தாபகர் பூஜ்ய ஸ்ரீராஜகோபால சுவாமிகள் அனுகிரகத்துடனும் பாஞ்சராத்ர ஆகம முறைப்படியும் ஸ்ரீவீராஞ்ஜனேய – ஸ்ரீவைகுந்தநாத பெருமாள் மற்றும் சந்நதி விமானங்கள், ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம முறைப்படி 22.5.2023 அன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆஞ்சநேயர் சுவாமி சந்நதிகளை தரிசனம் செய்தனர்.

தொகுப்பு- குடந்தை நடேசன்

The post வெகு விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: