கார் மீது அரசு பஸ் மோதி 4 பேர் பலி

திருமலை: விஜயவாடா அருகே நேற்று அதிகாலையில் கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் விஜயவாடாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அனந்தபுரத்திற்கு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். இவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு வருவதற்கு விஜயவாடாவிற்கு நேற்று முன்தினம் இரவு அனந்தபுரத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் விஜயவாடாவில் இருந்து இந்துபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் பிரகாசம் மாவட்டம் திரிபுராந்தகம் அருகே வந்தபோது, நேற்று அதிகாலை 4 மணிக்கு கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் மற்றும் பஸ்சின் முன்புறமும் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரில் இருந்த விஜயவாடாவைச் சேர்ந்த கே.ஸ்ரீனிவாஸ், அசோக், சாய் மற்றும் சந்திரசேகர் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார் மீது அரசு பஸ் மோதி 4 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: