நெல்லையில் நேற்று முன்தினம் 101 டிகிரி வெயில் அடித்தது. இந்த வெப்ப பதிவு, நேற்று மேலும் உயர்ந்து 101.5 டிகிரியானது. காலை முதலே வெயில் சுட்டெரித்த நிலையில், சாலையில் சென்றவர்கள் அனலால் அவதிப்பட்டனர். மாலை வேளையில் மாநகரின் புறநகர பகுதியான ராமையன்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து எஸ்டேட் பகுதியில் வானில் கருமேகங்கள் திரண்டிருந்தன. மாலை 5 மணிக்கு பிறகு இப்பகுதியில் கனமழை காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் பரவலாக காற்று வீசத் துவங்கியதால் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது. இந்நிலையில் நாளை(29ம் தேதி அக்னி நட்சத்திரம் நிறைவு பெறும் நிலையில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post அக்னி நட்சத்திர வெயில் நாளை விடைபெறுகிறது: மாஞ்சோலையில் கனமழை appeared first on Dinakaran.