விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்: போலீசாருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும் என போலீசாருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. காவல்துறை விசாரணையில் உயர்நீதிமன்றமும் தலையிடுவது இல்லை என ஐகோர்ட் கூறியுள்ளது. சேலத்தை சேர்ந்த ரஜினி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணைக்கு அழைக்கப்படுவோர் துன்புறுத்தப்பட்டதாக கவனத்துக்கு வந்தால் கோர்ட் கண்மூடிக் கொண்டிருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்: போலீசாருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: